புதுக்கோட்டை ரயில் நிலைய ரயில் கால அட்டவணை!




        புதுக்கோட்டை ரயில் நிலையம் (குறியீடு:PDKT) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை நகரில் உள்ள ஒரு ரயில் நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின் மதுரை கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.

இந்த ரயில் நிலையம் திருச்சிராப்பள்ளி - காரைக்குடி வழித்தடத்தில் உள்ள ஒரு முக்கிய ரயில் நிலையமாகும். இந்த நிலையம் தமிழகத்தின், தென்மாவட்டங்களுக்கு மாற்று இரயில் பாதையாகவும் செயல்படுகிறது.

1886-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், புதுக்கோட்டையை தொடருந்து மூலம் திருச்சி மற்றும் பிற இடங்களுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோது, ​​புதுக்கோட்டை சமஸ்தானம் ஒரு மன்னரால் ஆளப்பட்டதால், இவர்களுக்கிடையில் முன்மொழியப்பட்ட ரயில் பாதையின் செலவுத் தொகை பங்கீடு குறித்து நீடித்த பேச்சுவார்த்தைகள் நடந்தன. 

பின்னர், ஒரு வழியாக 35 ஆண்டுகளுக்கு பிறகு 1921-ஆம் ஆண்டில், திருச்சிராப்பள்ளி- புதுக்கோட்டை- காரைக்குடி பாதையின் போக்குவரத்துக்கான செலவு கணக்கெடுப்பானது, தென்னிந்திய இரயில்வேயின் (எஸ்.ஐ.ஆர்) ராவ் சாஹிப் எஸ்.கிருஷ்ணமாச்சாரியால் எடுக்கப்பட்டது. இதில் இரயில் பாதை அமைப்பதற்கான செலவு மைலுக்கு, ரூ. 1.32 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. 

ஒரு குறுகிய கால கட்டுமானத்திற்குப் பிறகு, திருச்சிராப்பள்ளி - புதுக்கோட்டை வழித்தடமானது ஏப்ரல் 17, 1929-ல் திறக்கப்பட்டது. மற்றும் ஜூலை 1, 1930 அன்று புதுக்கோட்டை - மானாமதுரை வழித்தடமானது திறக்கப்பட்டது.

இந்த ரயில் நிலையம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2.1 கிலோமீட்டர் (1.3 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது நகரத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளதால் இதை எளிதில் அணுக முடியாது. இதை ஒரு வாடகையுந்து அல்லது ஆட்டோ ரிக்சா மூலம் அணுகலாம். பாதை மாற்றத்திற்கு முன், நிலையத்தில் 3 தடங்கள் மட்டுமே இருந்தன. இப்போது சரக்கு தொடருந்துகளை கையாள, கூடுதல் நான்காவது பாதை அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தொடருந்து நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு கணிசமான அளவு இடமும் உள்ளது.

திருச்சிராப்பள்ளியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை செல்லும் அனைத்து ரயில்களும், சென்னை எழும்பூர் , திருச்சிராப்பள்ளியில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சில ரயில்களும் மற்றும் செங்கோட்டைக்கு செல்லும் ஒரு ரயில் நிலையம் வழியாக செல்கின்றன.மேலும் வட மாநிலங்களில் இருந்து வாராந்திர ரயில்கள் புதுக்கோட்டை வழியாக இராமேஸ்வரம் செல்கிறது. ஒரு சில ரயில்கள் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நிற்காமலும் செல்கிறது. மேலும் புதுக்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயிலும் செல்கிறது 
 
புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும், குறைந்தபட்சம் 1-2 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது.

நன்றி:@Pudukkottairailusersfbpage

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments