அறந்தாங்கி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அறந்தாங்கி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காரில் கடத்திக்கொண்டு செல்லப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அந்த மூட்டைகளை விற்பனைக்காக கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது.
3 பேர் கைது
இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை கடத்தி சென்ற அறந்தாங்கி அருகே சின்னவயல் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (வயது 27), முகமது அப்துல்லா (25), அமீர் (22) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். காரில் இருந்து 250 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.