முத்துக்குடா
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியான முத்துக்குடாவில் சுற்றுலா தலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்தது. அங்கு அலையாத்தி காடுகள் உள்ளன. படகு மூலம் சென்று அலையாத்தி காடுகளை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முத்துக்குடா பகுதியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் முத்துக்குடா கடற்கரை பகுதியில் ரூ.3 கோடியில் சுற்றுலா தலம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு வெளியானது.
15 ஏக்கர் இடம் தேர்வு
இந்த நிலையில் சுற்றுலா தலம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. கடற்கரையையொட்டி அருகில் உள்ள தரிசு நிலங்களில் சுற்றுலா தலம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது 15 ஏக்கர் இடம் தேர்வு செய்து அதனை சுற்றுலாத்துறைக்கு வருவாய்த்துறை ஒதுக்கி உள்ளது. அதற்கான ஆணை தற்போது வருவாய்த்துறையிடம் இருந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த இடத்தில் பணிகள் தொடங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். பொழுது போக்கு அம்சம், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளுடன் கூடிய சுற்றுலா தலம் அமைக்கப்படுவதோடு, படகு மூலம் அலையாத்தி காடுகளை பொதுமக்கள் சுற்றிப்பார்க்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.