மீமிசல் அருகே முத்துக்குடா சுற்றுலா தலத்திற்கு ரூ.3 கோடியில் பணிகள் 15 ஏக்கர் இடம் ஒதுக்கீடு




ரூ.3 கோடியில் முத்துக்குடா சுற்றுலா தலத்திற்கு 15 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

முத்துக்குடா

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியான முத்துக்குடாவில் சுற்றுலா தலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்தது. அங்கு அலையாத்தி காடுகள் உள்ளன. படகு மூலம் சென்று அலையாத்தி காடுகளை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முத்துக்குடா பகுதியை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் முத்துக்குடா கடற்கரை பகுதியில் ரூ.3 கோடியில் சுற்றுலா தலம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு வெளியானது.






15 ஏக்கர் இடம் தேர்வு

இந்த நிலையில் சுற்றுலா தலம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. கடற்கரையையொட்டி அருகில் உள்ள தரிசு நிலங்களில் சுற்றுலா தலம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. தற்போது 15 ஏக்கர் இடம் தேர்வு செய்து அதனை சுற்றுலாத்துறைக்கு வருவாய்த்துறை ஒதுக்கி உள்ளது. அதற்கான ஆணை தற்போது வருவாய்த்துறையிடம் இருந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த இடத்தில் பணிகள் தொடங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். பொழுது போக்கு அம்சம், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளுடன் கூடிய சுற்றுலா தலம் அமைக்கப்படுவதோடு, படகு மூலம் அலையாத்தி காடுகளை பொதுமக்கள் சுற்றிப்பார்க்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments