அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக செகந்திராபாத்- ராமேசுவரம் இடையே வாரந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் 24 (நாளை) முதல் இயக்கம்





அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக செகந்திராபாத்- ராமேசுவரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.


செகந்திராபாத் - இராமேஸ்வரம்

செகந்திராபாத் -ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 07695)
வாராந்திர  சிறப்பு ரயில்  ஆகஸ்டு் 24-ந் தேதி முதல் டிசம்பர் 28-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது புதன்கிழமை தோறும் இரவு 7.05 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு விழுப்புரம் மயிலாடுதுறை திருவாரூர், திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, வழியாக சென்று வியாழக்கிழமை இரவு 11.40 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடையும்.

இராமேஸ்வரம் - செகந்திராபாத் 

இதைப்போல மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - செகந்திராபாத் விரைவு ரயில்(வண்டி எண் 07696) ஆகஸ்டு் 26 -ந் தேதி முதல் டிசம்பர் 30 -ந்தேதி வரை 
இயக்கப்பட உள்ளது .வெள்ளிக்கிழமை தோறும் காலை 8.50 மணிக்கு ராமேசுவரத்தில் புறப்பட்டு காரைக்குடி , அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி திருவாரூர், மயிலாடுதுறை விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை  இரவு 9.50‌ மணிக்கு அடையும் பின்னர் மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது. 

21 பெட்டிகளை கொண்ட இந்த வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்டு முதல் டிசம்பர் மாதம் வரை இயக்கப்பட உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments