ஆவுடையார்கோவில் அருகே 3-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள்



ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளது.
இங்கு தற்காலிக பேராசிரியர்கள் 50 பேர்களுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஊதியம் வழங்கவில்லை என்றும், ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாத ஊதியத்தை வழங்ககோரியும், சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு தொடர் போராட்டம் 3 நாட்களாக நடைபெற்றது. 

இந்த அரசு கல்லூரி இதற்கு முன்பு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டது. இந்த கல்லூரி நீண்ட காலத்திற்கு முன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் வேலை செய்யும் பேராசிரியர்கள் தற்காலிகமானவர்களாக பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்று பேராசிரியர்கள் கூறினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments