சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவுற்றதை நாடு முழுவதும் (மார்ச்-13 -2021 முதல் 15-08-2022 வரை) 75 வாரங்களுக்கு 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா விழாவாக கொண்டாட வேண்டும் என்று விடுத்ததையடுத்து அதை சிறப்பிக்கும் வகையில் ஆகஸ்டு 13 முதல் 15 வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றவவும் மேதகு பாரதப் பிரதமர் அவர்கள் வேண்டுகோள் வைத்தார்கள்.
இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவும் 76-வது சுதந்திர தின விழாவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. நிழ்வில் பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை ஏற்று தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரத்திற்காக உழைத்த உத்தமர்களை நினைவு கூர்ந்து தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா, உறுப்பினர் கண்ணையா கலந்துகொண்டனர்.
சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியர் பற்றி மாணவி ஆர்த்தி மிகவும் எழுச்சிமிகு உரையையும், வந்தேமாதரம் பாடலை மாணவி கல்பனாவும் பாடி சிறப்பித்தனர். அவர்களுக்கு வேலுநாச்சியார் முகமூடியும் பரிசுகளும் வழங்கி கொளரவம் செய்யப்பட்டது. இந்நிழ்வில் உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும்,மாணவ,மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்களில் சிலர் தேசத் தலைவர்களின் முகமூடியை அணிந்து தேசப்பற்றை பறைசாற்றிய விதம் அனைவரையும் மகிழ்வித்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.