ஆவுடையார்கோவில் தாலுகா கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் சிலர் மீன்களை பிடித்து விற்கும் நோக்கத்தில் மின்மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றி வருவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்மோட்டாரை நிறுத்துமாறு கூறினர். இதனால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மின் மோட்டாரை நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் ஆடி, ஆவணி மாதங்களில் விவசாயிகள் விதை விதைக்க உள்ளதால் ஏரி நீரை வீணாக்க கூடாது. மேலும் அந்த ஏரியில் பொருத்தப்பட்டு உள்ள மின் மோட்டாரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.