பாம்பை அடிக்க முயன்ற போது வெடி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம்




அன்னவாசல் அருகே வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம் வீட்டிற்குள் புகுந்த பாம்பை அடிக்க முயன்ற போது சம்பவம்


அன்னவாசல் அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பை அடிக்க முயன்றபோது வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

வீட்டிற்குள் புகுந்த பாம்பு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நாங்கபட்டி, சித்தகுடிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 62). இவர் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை இவர் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் பாம்பை அடிக்க முயன்றனர்.

அப்போது வீட்டில் இருந்த மின் இணைப்பு பெட்டிக்குள் நல்ல பாம்பு புகுந்து விட்டதாக கூறப்படுகிறது.

5 பேர் படுகாயம்

அப்போது பாம்பை அடித்தபோது எதிர்பாராதவிதமாக மின் இணைப்பு பெட்டியில் இருந்து தீப்பிடித்து மின்சார வயர்கள் எரிய தொடங்கியது. இதையடுத்து வீட்டில் இருந்த பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்கள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் வீட்டின் ஓடுகள் விழுந்தன. வீட்டின் சுவர்களும் இ்டிந்து விழுந்தது.

இந்த விபத்தில் சுப்பிரமணியன், இவரது உறவினரான மகேஸ்வரன் (23), ராமகிருஷ்ணன் (38), விஜயராணி (28), மோகன்ராஜ் (5) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments