பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் 22.09.2022 வியாழக்கிழமை மாலை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் பாதுகாப்பு மற்றும் அலுவலர் குடியிருப்பு, சரக்கு போக்குவரத்து முனையகட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் கோட்ட பொறியாளர் (கிழக்கு) ரவிக்குமார் ,வர்த்தக பிரிவு மேலாளர் , எலக்ட்ரிக்கல் சிக்னல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அது சமயம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன், துணைச் செயலாளர் மு. கலியபெருமாள் செயற்குழு உறுப்பினர் வே சுப்பிரமணி உறுப்பினர்கள் கோ. சங்கர் , பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கீழ்க்கண்ட கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்
கோரிக்கை மனுவில் பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் விரைவில்
சரக்கு போக்குவரத்தை தொடங்க வேண்டும் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள சிறிய பழுதுகளை நீக்க வேண்டும்,கட்டி முடிக்கப்பட்ட பட்டுக்கோட்டை இரயில் நிலைய காவல் நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் டிக்கெட் முன்பதிவு மைய வேலை நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும் , சோழன் விரைவு இரயிலுக்கு இணைப்பு இரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட கோட்ட இரயில்வே மேலாளர்,"சோழன் விரைவு இரயிலுக்கான இணைப்பு இரயில் பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் இரயில்வே வாரிய அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
விரைவில் இரவு நேர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டு முழுமையான இரயில் சேவை குறிப்பாக தாம்பரம் செங்கோட்டை வாரம் மும்முறை இரயில் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்பதிவு மைய நேரத்தை நீட்டிக்கவும் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.
பட்டுக்கோட்டை ரயில் நிலையம் நன்றாக பராமரிக்கப்படுவதற்க்கு இரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.