பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் போலீஸ் அனுமதி சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால் சில நேரங்களில் இந்த சான்றிதழ் கிடைப்பதற்கு தாமதம் ஏற்படுவதால், பாஸ்போர்ட்டு பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்சினையை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மூலமே போலீஸ் அனுமதி சான்றிதழ் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த நடைமுறை நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ேபாலீஸ் அனுமதி சான்றிதழுக்கான தேவையின் திடீர் அதிகரிப்பை நிவர்த்தி செய்யும் வகையில், செப்டம்பர் 28-ந்தேதி (நாளை) முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆன்லைன் தபால் அலுவலக பாஸ்போர்ட்டு சேவை மையங்களில் போலீஸ் அனுமதி சான்றிதழ் சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் வசதியை சேர்க்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளது.
இது வெளிநாட்டில் வேலை தேடும் இந்திய குடிமக்களுக்கு உதவுவதுடன், கல்வி, நீண்ட கால விசா, குடியேற்றம் போன்ற பிற தேவைகளுக்கான போலீஸ் அனுமதி சான்றிதழ் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.