புதுக்கோட்டையில் ஊர்க்காவல் படையில் சேர இளைஞர், இளம்பெண்கள் குவிந்தனர்




புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு முகாம் நேற்று முதல் தொடங்கியது. இதில் சேர இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் புதுக்கோட்டையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேற்று குவிந்தனர்.

முன்னதாக விண்ணப்ப படிவங்கள் வினியோகத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே தனது அலுவலகத்தில் வைத்து தொடங்கி வைத்தார். அப்போது ஊர்க்காவல் படை அதிகாரி அழகுமணியன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆட்கள் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

சான்றிதழ்கள்

இதில் ஆண், பெண் இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 3 நாட்கள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் விண்ணப்பிக்கலாம். இதில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 45 வரை. உடற்தகுதிகள், காவல்துறையை போன்றது. குற்ற வழக்குகளிலோ, அரசியல் கட்சிகளிலோ சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக்கூடாது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ள பணிகளுக்கு இடையூரின்றி செயல்படலாம். இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணி நாட்களுக்கு உரியபடித்தொகை மட்டும் பெற்றுத்தரப்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஊர்க்காவல் படையில் மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments