ஆலங்குடி அருகே அங்கன்வாடி கட்டிட மேற்கூரை இ்டிந்து விழுந்ததில் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே விஜயரெகுநாதபட்டியில் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அங்கன்வாடி கட்டித்தின் மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் எந்த வித காயமின்றி உயிர் தப்பினர். இதையடுத்து அங்கு பயிலும் 20 குழந்தைகளும் கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் அமர வைக்கப்பட்டனர்.
மேலும் அங்கன்வாடி கட்டிடம் சிதிலமடைந்துள்ளதால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவே அச்சமாக உள்ளதாக பெற்றோர்கள் கூறினர். இதேபோல் அங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிட மும் சிதிலமடைந்து காணப்படுவதாகவும், அதில் 20 மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் கல்வி பயின்றும் வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிதிலமடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.