Breaking: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை செப்.8 பள்ளி, கல்லுரிகளுக்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல்!!



அறந்தாங்கி அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(செப்.8) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மற்றும் நகரம் அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா 08.09.2022 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக 24.09.2022 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், மேலும் அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும், இவ்வாறு அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments