ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் கடல் நடுவே அமைந்துள்ள அழகிய பாலமாகும்.
பாம்பன் பாலத்தின் கட்டுமான பணி கடந்த 1973ஆம் ஆண்டு ரூ.20 கோடி ரூபாய் நிதியில் தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த பணிகள் 1988ஆம் ஆண்டு முடிவடைந்தன. கடலுக்குள் 79 தூண்களை அமைத்து கட்டப்பட்ட இந்த பாலத்தை அக்டோபர் மாதம் 2ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) அன்று, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்தார்.
இந்த பாலத்தின் மைய பகுதி, ஸ்ப்ரிங் பேரிங் இணைப்புகளால் கட்டப்பட்டுள்ளது. அதுபோல் தினமும் பாம்பன் பாலம் வழியாக ஏராளமான வாகனங்கள் ராமேஸ்வரம் சென்று வருகின்றன. கடலுக்குள் அமைந்துள்ள பாலத்தை சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகுந்த ஆச்சரியத்தோடு நின்று பார்த்து ரசித்து செல்வது வழக்கம்.
ஆசியாவில் கடலுக்குள் அமைந்துள்ள மிக நீளமான பாலங்களில் பாம்பன் பாலமும் ஒன்றாகும். இந்த பாலம் தனது சேவையை தொடங்கி, 34 ஆண்டுகளை கடந்து தற்போது 35ஆவது ஆண்டை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பாம்பன் பாலம் 16 கோடி ரூபாயில் சீரமைக்கும் பணிகள் கடந்த 8 மாதத்திற்கு மேலாகவே நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்னும் 8 மாதத்திற்குள் முடிக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் பாம்பன் பாலத்துக்கு புதிய வர்ணம் பூசப்பட்டு, புதிய நிறத்தில் ஜொலிக்க இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.