விராலிமலை அருகே பாலத்தில் கார் மோதி தம்பதி உயிரிழப்பு...



விராலிமலை அருகே பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியாகினர். வங்கி ஊழியர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை அடையார் காந்தி நகரை சேர்ந்தவர் பிஜேஸ்வரன் மகன் பிஸ்வாராஜன் (வயது 38). வங்கி ஊழியர். இவர், தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிஜய்குமார் சரண் (75), இவரது மனைவி மீரா சரண் (67). பிஸ்வாராஜன் வேலை பார்க்கும் வங்கியில் வேலை பார்க்கும் சுஜித் சுதாகரன் மனைவி அஞ்சனா (32). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் ஒரு காரில் கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தனர். காரை பிஸ்வாராஜன் ஓட்டினார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்து விராலூர் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே மீரா சரண் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டனர். இதில் பிஸ்வாராஜன் மற்றும் அஞ்சனா ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், பிஜய்குமார் சரணை விராலிமலை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

மேலும் மீரா சரணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடைேய விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிஜய்குமார் சரண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments