சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 15-ந் தேதி வரை நீட்டிப்பு








புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கால அவகாசம் கொடுக்கப்பட்டு 15-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments