கோட்டைப்பட்டினத்தில் மீன்வளத்துறையினரை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் வேலைநிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்ததாக மீன்வளத்துறையினர் 4 விசைப் படகு மீதும், கரைப்பகுதியில் மீன் பிடித்ததாக 5 விசைப்படகு மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் மீன்வளத்துறையினர் வேண்டுமென்றே பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் மீன்வளத்துறையினரை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
மானிய டீசலை நிறுத்த வேண்டும்
மீன்பிடி தடை காலத்தில் என்ஜின் பொருத்திய நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது. தடைக்காலத்தில் விசைப்படகுக்கு வழங்கும் மானிய டீசலை எப்படி தடை செய்கிறார்களோ அதை போல் நாட்டுப்படகுக்கு வழங்கும் மானிய டீசலை நிறுத்த வேண்டும். தடைகாலத்தில் நாட்டுப்படகில் சலங்கை வலை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது. நாட்டுப்படகிற்கு வழங்கும் மானிய டீசலை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதை மீன்வளத்துறையினர் தடுக்க வேண்டும்.
அதிக விசைத்திறன் கொண்ட விசைப்படகு மூலம் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் கடல் வளத்தை அழித்துக் கொண்டிருக்கும் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ராட்சத படகுகளை கொண்டு மீன் பிடிக்க அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ேவலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் போராட்டத்தினால் விசைப்படகுகள் வரிசையாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் வாபஸ்
இந்நிலையில் போராட்டம் நடத்திய மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் படகு மீது போட்ட வழக்கினை உரிய விசாரணை செய்து வாபஸ் பெறப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில், வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் மீனவர்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.