புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் பரணி கார்த்திக்கேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், அந்தந்த பகுதி ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,தங்கள் பகுதிக்கு வேண்டிய குறை நிறைகளை முன்வைத்தனர். கூட்டத்தில் 9 தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்று பின்பு நிறைவேற்றப்பட்டது.
அப்போது மும்பாலை ஒன்றியக்குழு உறுப்பினர் நீலாவதி பேசுகையில், வடக்கு அம்மாபட்டினம் முருகன்கோவில் சாலை, வடக்கு மணமேல்குடி அம்மன்கோவில் சாலை மற்றும் அம்பால் நகரில் மின்மாற்றியை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதே போன்று கரகத்திகோட்டை ஒன்றியக்குழு உறுப்பினர் கணேசன் பேசுகையில், கொடிக்குளம் கண்மாயிலிருந்து கரகத்திகோட்டை வரை சுமார் 30கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளது
அதனை சரிசெய்ய வேண்டும் என்றார். கட்டுமாவடி ஒன்றியக்குழு உறுப்பினர் கணேசன் பேசுகையில் தங்கள் பகுதியில் அனைத்து தார்ச்சாலைகளை செப்பனிட்டு தர வேண்டும் என கூறினார். இதற்கு பதிலளித்த ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் அனைத்து கோரிக்கைகளும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றித்தரப்படும் என தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.