தேர்வு கட்டண உயர்வை கண்டித்து கறம்பக்குடி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்





திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உள்ளிட்ட 15 விதமான கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மருதன்கோன் விடுதியில் உள்ள கல்லூரி முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கல்லூரி மாணவர் செயலாளர் அன்பரசன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் பாலாஜி, பிரியங்கா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 
எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments