நவம்பர் 1-ந்தேதியன்று உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
விழிப்புணர்வு
இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் தாரேஷ் அகமது அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நவம்பர் 1-ந்தேதியன்று உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில், அந்த ஊராட்சியினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டங்களில் ஏதாவது ஒரு ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டு நலத்திட்ட உதவிகள், பல்வேறு துறை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
பாராட்டு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் மாவட்ட அலுவலகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகள் குறித்த கண்காட்சிகளை நடத்தலாம். அங்கு அரசால் வெளியிடப்படும் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுக்கான குறும்படங்களை காட்சிப்படுத்த வேண்டும்.
கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சேர்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கிராம சபையில் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
சிறப்பாக செயலாற்றிய, பூர்வாங்க பணிகளை மேற்கொண்ட, பசுமை மற்றும் நீர்நிலைகளை பாதுகாத்து, அந்த ஊராட்சியின் வருவாயை அதிகரித்து அதன் பலனை ஊராட்சிக்கு சரியான வகையில் பயன்படுத்திய கிராம ஊராட்சித் தலைவர்களை கொண்டு கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கருத்து பட்டறைகளை நவம்பர் முதல் வாரத்தில் நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.