புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. தினந்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து 97 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரதிஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நடராஜன் மகன் அருள் (வயது 36), கனகராஜ் மகன் அய்யப்பன் (30), சோனையன் மகன் சுந்தரம் (26) ஆகிய 3 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
3 மீனவர்கள் கைது
இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
கைது செய்யப்பட்ட 3 மீனவர்களையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை செய்ய வேண்டும்
இதுகுறித்து மீனவ சங்க நிர்வாகிகள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 8 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் 8 பேரும் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பி உள்ளனர். ெஜகதாப்பட்டினம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட அடுத்த நாளே கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தது கண்டத்துக்குரிய செயலாகும். இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இலங்கை அரசு மீது மத்திய, மாநில அரசுகள் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். தற்போது கைது செய்யப்பட்ட 3 மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.