மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் எளிதில் தீ பிடிக்கும் இடங்கள் ஆகியவற்றின் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.
பட்டாசுகள் விற்பனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர பட்டாசு விற்பனையகங்களில் மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய்யப்பட வேண்டும். விற்பனை செய்யப்படும் பட்டாசுகளும் அரசால் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் அனுமதி பெற்ற கட்டிடங்களில் மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய்வதை வணிகர்கள், விற்பனையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கட்டிடங்களுக்கு வெளியே மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்கள் பட்டாசுகளை மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் எளிதில் தீ பிடிக்கும் இடங்கள் ஆகியவற்றின் அருகே வெடிக்கக் கூடாது.
சுற்றுச்சூழல் பாதிப்பு
அரசினால் அறிவுறுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். பிற நபர்களை அச்சுறுத்தும் விதமாகவும், அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவும் பட்டாசு வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல் விலங்குகளுக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத வகையில் வெடிப்பதை உறுதி செய்திட வேண்டும்.
அதிக சத்தம் உண்டாக்கும் தடைசெய்யப்பட்ட வெடியினை விற்பனை செய்யக்கூடாது, பயன்படுத்தக்கூடாது. பொதுமக்கள் நமது சுற்றுச்சூழலின் மாசு, பாதிப்பு உண்டாக்கும் வெடிகளை பயன்படுத்தக்கூடாது. மாசில்லா மற்றும் விபத்தில்லா பாதுகாப்புடன் கூடிய தீபாவளி என்பதை உறுதிபடுத்தும் விதமாக செயல்படுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.