20 ஆண்டுகளுக்குப் பிறகு அகஸ்தியம்பள்ளி - திருத்துறைப்பூண்டி ரயில் சேவை; அதிவேகத்தில் சிறப்பு ரயில் சோதனை ஒட்டம்!



அகஸ்தியம்பள்ளியிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை ரூ. 288 கோடி செலவில் 37 கிலோமீட்டர் தூரத்திற்கு அகல ரயில் பாதை பணிகள் அமைக்கும் பணிகள்ரயில் பாதையில் தெற்கு ரயில்வேத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்த நிலையில் 110 கிமீ அதிவேகத்தில் சிறப்பு ரயில் மூலம் சோதனை ஒட்டம்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளியிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை ரூ. 288 கோடி செலவில் 37 கிலோமீட்டர் தூரத்திற்கு அகல ரயில் பாதை பணிகள் அமைக்கும் பணிகளும், ஆறு இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடிவடிடைந்துள்ளன.

நேற்று ட்ரோலிகள் மூலம் இந்த அகல ரயில் பாதையில் தெற்கு ரயில்வேத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அகஸ்தியம்பள்ளி ரயில் நிலையத்தில் 9 ரயில் பெட்டிகளுடன் கூடிய ரயிலுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பெங்களுரூ தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணீஸ்‌ அகர்வால் மற்றும் தெற்கு ரயில்வேத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு 110- கிமி அதிவேகத்தில் செல்லக் கூடிய ரயில் சோதனை ஒட்டத்தை துவக்கி வைத்தனர்.

இருபது ஆண்டுகளுக்கு பிறகு அகஸ்தியம்பள்ளி முதல் திருத்துறைப்பூண்டி வரை பயணிகள் ரயில் போக்குவரத்தும், சரக்கு ரயில் போக்குவரத்தும் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் உப்பு உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் பெண்கள் என அனைவரும் அகஸ்தியம்பள்ளி ரயில் நிலையத்தில் ஆர்வத்துடன் திரண்டனர். அண்டர்காடு சுந்தரேச விலாச உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் ரயில் போக்குவரத்து நடைபெறுவதை யொட்டி கையில் தேசியக் கொடி ஏந்தி ரயில் பாடல் பாடி மலர் தூவி வரவேற்றனர்.

அகஸ்தியம்பள்ளி, வேதாரண்யம், தோப்புத்துறை, நெய்விளக்கு, குரவப்புலம், கரியாபட்டினம் ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் வந்த சிறப்பு ரயிலுக்கு பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

புகைப்படங்கள் உதவி : திருத்துறைப்பூண்டி அப்துல் சமது 











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments