மனோரா கடற்கரையில் 3.2 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன





மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் இயற்கையான கடல் வளத்தை புதுப்பிக்கவும், இறால் உற்பத்தியை அதிகரிக்கவும் மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம்,(ICAR - CMFRI) பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது.

 இதனால், இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, இப்பகுதியில் நீடித்து இறால் வளத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வழிவகை செய்யப்படுகிறது. அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், "தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடுதல்" என்ற திட்டத்தை மண்டபத்தில் அமைந்துள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ரூ.168.948 இலட்சம் மதிப்பீட்டில், 200 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை, தமிழ்நாட்டின் கடல் பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி பகுதிகளில் விடப்படும்.


27.10.2022 (வியாழக்கிழமை) அன்று, 3.2 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மனோரா பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டன. மேற்சொல்லப்பட்ட இறால் குஞ்சுகள், திரு. M.K. முத்துமாணிக்கம், ஒன்றிய பெருந்தலைவர், சேதுபாவாசத்திரம், திரு. அஃகில் தம்பி, IFS, DFO, தஞ்சாவூர், திரு. M. சிவகுமார், உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தஞ்சாவூர், முனைவர் V. பாலாஜி, OMCAR அறக்கட்டளை, தஞ்சாவூர், மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர், Dr. G. தமிழ்மணி, மீன் வள ஆய்வாளர், தஞ்சாவூர் அவர்களால் கடலில் விடப்பட்டன. தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு சங்கம் மற்றும் நாட்டுப்படகு சங்க முக்கிய நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் சரபேந்திரப்பட்டினம், மண்டபத்திலுள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இத்தகைய முயற்சிக்கு இந்திய அரசு மற்றும் ICAR-CMFRI க்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், பச்சை வரி இறால் வளத்தை பாதுகாக்க, இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர். திட்டம் துவங்கியதிலிருந்து (பிப்ரவரி, 2022), இதுவரை 22.64 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னர் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டன. இந்நிகழ்ச்சியை, மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானியானகள், Dr. B. ஜான்சன் மற்றும் Dr. M. சக்திவேல் ஒருங்கிணைத்தார்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments