மணமேல்குடி ஒன்றியத்தில் 4 பள்ளிச் செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பு.




மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் பள்ளிச் செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது .
இப்பணியில் இன்று களப்பணியில் ஈடுபட்டு 3 மாணவர்களை பள்ளியில் சேர்க்கப்பட்டது.

 மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 
12 ம் வகுப்பு  அருணகிரி மற்றும் தருண்குமார் இரண்டு மாணவர்களையும்., புதுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி  10 ம் வகுப்பு மாணவி ராகவி மாணவியையும் இன்று மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு தொடர்ந்து வருவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

இக்களப்பணியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் மற்றும்  புதுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு  சகாயராஜ்


வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு  திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர் அங்கையற்கண்ணி   குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்   திரு. மரியமார்ட்டின், வாசுகி, சிவனேஸ்வரி மற்றும் முத்து பிரகாஷ்  அங்கன்வாடி குழந்தைகள் மைய ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரி ஆகியோர்  ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments