கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த ராவுத்தர் நெய்னா முகம்மது அவர்கள்



கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (ரஹ்மானியா பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த மர்ஹூம் K.முகம்மது இஸ்மாயில் அவர்களின் பேரனும், மர்ஹூம் K.M.நூர் முகம்மது அவர்களின் மகனாரும்,  ராஜா முகமது, முகம்மது பாதுஷா,ஹாஜி (எ) ஷாஜகான் அவர்களின் சகோதரருமான ராவுத்தர் நெய்னா முகம்மது இன்று 07.11.2022 திங்கட்கிழமை இருசக்கர வாகன விபத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
 
ஜனாஸா நல்லடக்கம் நேரம்  இன்று (07-11-2022) திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29:57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments