ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு சுவரோட்டி தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவரோட்டி தயாரிக்கும் போட்டி ஆவுடையார்கோவில் வருவாய் துறை சார்பில் (தேர்தல் பிரிவு) கடந்த மாதம் நடைபெற்றது.இதில்வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று (25_11_2022) நடைபெற்றது.இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு முறையே ₹500,₹200,₹100 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி தந்தார்கள்.உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்களும் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.