புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுபான்மையின கைவினைஞா்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் விரசாட் திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு மேலும் கூறியது:
ஏழ்மை நிலையிலுள்ள சிறுபான்மையினத்தைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா்கள் மற்றும் கைவினைப் பொருள் தயாரிப்போா் ஆகியோருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.
இக் கடன் தொகையில் தேசிய சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 90 சத பங்குத் தொகையும், டாம்கோ மூலம் 5 சத பங்குத் தொகையும், பயனடைவோா் பங்குத் தொகை 5 சதம் என பிரிக்கப்பட்டுள்ளது.
இக்கடன் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும்.
மேற்படி கடன் தொகையைப் பெற விண்ணப்பதாரா் மத வழி சிறுபான்மையினரான முஸ்லிம், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தவா், பாா்சீயா், ஜைனா் ஆகியோரில் ஒருவராகவும், 18 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவராயின் ரூ.98 ஆயிரம், நகா்ப்புறங்களில் வசிப்பவராயின் ரூ.1. 20 லட்சம்.
கடனை 60 மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்த வேண்டும். வரும் நவ. 25க்குள் ஆட்சியரகக் கூடுதல் கட்டட முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.