புதுக்கோட்டை மாவட்டத்தில் ரத்த சோகை நோயால் பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இரும்பு சத்து நிறைந்த உணவினை உட்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ரத்த சோகை
நாட்டில் பெண்களுக்கு ரத்த சோகை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் பெண்கள், குழந்தைகள் ரத்த சோகையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது கூறியதாவது:- ரத்த சோகை என்பது ரத்தத்தில் சிகப்பு ரத்த அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதை குறிக்கிறது.
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை தசைகளுக்கு சுமந்து செல்கிறது. ஒருவேளை ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ, ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ தசைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் திறன் ரத்தத்துக்கு குறையும். இதனால் உடற்சோர்வு, வலிமையின்மை, மயக்க உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை உண்டாகும்.
இரும்பு சத்து உணவு பொருட்கள்
ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக ரத்த சோகை உள்ளது. குறிப்பாக குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களுக்கு ரத்த சோகை குறைபாடு அதிகம். மாதவிடாய், மகப்பேறு போன்றவை காரணமாக பெண்களுக்கு ரத்தம் வெளியேறும் காரணிகள் இயற்கையாகவே இருப்பதால் பெண்களிடையே ரத்த சோகை அதிகமாக இருக்கிறது. மகப்பேறின்போது தாய் இறப்பது போன்றவற்றை ரத்த சோகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தவிர்க்க முடியும்.
இரும்பு சத்து குறைவான உணவு, குடற்புழுக்கள் பாதிப்பு, செருப்பு அணியாமல் நடத்தல், தன் சுத்தம் பேணாதல் உள்ளிட்டவற்றால் ரத்தசோகை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இரும்பு சத்து நிறைந்த உணவினை உட்கொள்ள வேண்டும். பேரீச்சம்பழம், கீரை வகைகள், கொண்டக்கடலை, அச்சுவெல்லம் உள்பட பாரம்பரிய உணவு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
விழிப்புணர்வு
குழந்தைகளுக்கு துரித உணவுகள், ஜங்புட்ஸ் என அழைக்கப்படும் திண்பண்டங்கள், உணவுகளை தவிர்த்திட வேண்டும். அவர்களுக்கு சிறுதானியங்களால் செய்யப்படும் உணவு திண்பண்டங்களை கொடுக்கலாம். இதன்மூலம் ரத்த சோகை பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும்.
ரத்த சோகை உள்ள குழந்தையின் செயல்பாடு குறைவாக இருக்கும். சுறுசுறுப்பு இல்லாமல் கொஞ்சம் மந்தமாக இருப்பார்கள். இதனால் ரத்த சோகை பாதிப்பு குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வீடு, வீடாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.