அறந்தாங்கி அருகே சைக்கிள் மீது வேன் மோதல்; விவசாயி பலி




அறந்தாங்கி அருகே வெட்டி வயலை சேர்ந்தவர் ரவி (வயது 55). விவசாயி. இவர் கூகனூரில் உள்ள இவருக்கு சொந்தமான விவசாய இடத்தை பார்ப்பதற்காக நேற்று சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுப்பிரமணியபுரத்தில் இருந்து எதிரே வந்த வேன் ரவி ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியதில் வேன் ரோட்டில் இருந்து வயலுக்குள் இறங்கியது. இதையடுத்து இதில் படுகாயமடைந்த ரவியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments