புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை, குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கினார். சமூகநல அலுவலர் வசந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஆவுடையார்கோவில் வட்டார மருத்துவ அலுவலர், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
வளைகாப்பு விழாவில் 250 கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. கர்ப்பிணிகளுக்கு 5 வகையான கலவை சாதம் வழங்கப்பட்டன. ஊட்டச்சத்து கண்காட்சியில் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருள் காட்சிப்படுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மேற்பார்வையாளர் நிலை - 1, மேற்பார்வையாளர் நிலை - 2 மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர். முடிவில் மேற்பார்வையாளர் நிலை- 1 பெரியநாயகம் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.