மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற 31.01.2023-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்!!



மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற 31.01.2023-க்குள் விண்ணப்பிக்கலாம்  என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள, மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ/மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ/மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிக பட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித் தொகையாக வழங்குவதற்கு, தமிழ்நாடு அரசால்
ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி கல்வி உதவித் தொகைக்கு 2022-23ம் கல்வியாண்டில் புதியது (Fresh applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்கத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் மேற்படி 2022-23ம் நிதியாண்டிற்கான புதியது கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து, ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலக இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைபேசி எண் 044-29515942, மின்னஞ்சல் முகவரி  tngovtiitscholarhsip@gmail.com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.01.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments