புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை பகுதி சாலைகளில் மீண்டும் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் மாடுகள் சாலைகளில் நிற்பதால் வாகனங்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது.
இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் வரும்பொழுது விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, மணமேல்குடி,அம்மாபட்டினம், கோட்டைப்பட்டிணம், மீமிசல் சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் அதிக அளவில் நின்று சாலைகளை ஆக்கிரமித்து கொள்கின்றது. இதனால் வாகன ஓட்டிகளும், வயதானவர்கள், குழந்தைகள் சென்று வர மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
உடனடியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் விபத்தை ஏற்படுத்தும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அந்த அந்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.