மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளிச் செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பு!



புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுத்தலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பள்ளிச் செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதனடிப்படையில் நேற்று 2.11.2022 மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜீவா என்ற 12-ஆம் வகுப்பு மாணவனையும், கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சதீஸ்வரன் என்ற 12-ஆம் வகுப்பு மாணவனையும், கோலேந்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் நிதீஷ் என்ற பத்தாம் வகுப்பு மாணவனையும் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டது.

சதீஸ்வரன் என்ற மாணவன் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு வராமல் இருந்தது அறிந்து மாணவனுக்கு உதவிகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்வதாக கூறி நேற்று பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அதேபோல் ஜீவா என்ற மாணவனையும் உடல் நலக்குறைவால் தொடர்ந்து வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அம்மாணவன் பள்ளிக்கு தொடர்ந்து வருவேன் என்று உறுதி அளித்தார்.
நேற்று முதல் தொடர்ந்து படிப்பதற்கு பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டது.

கோலேந்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நிதீஷ் என்ற மாணவனை பத்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டது.
இக்களப் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஜீவானந்தம், காளியப்பன் தேர்தல் பணி துணை வட்டாட்சியர் அலுவலர் முருகேசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் மற்றும் அங்கையர்கண்ணி, கணக்காளர்கள் கலைச்செல்வன் ஆகியோர் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments