புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுத்தலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பள்ளிச் செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதனடிப்படையில் நேற்று 2.11.2022 மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜீவா என்ற 12-ஆம் வகுப்பு மாணவனையும், கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சதீஸ்வரன் என்ற 12-ஆம் வகுப்பு மாணவனையும், கோலேந்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் நிதீஷ் என்ற பத்தாம் வகுப்பு மாணவனையும் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டது.
சதீஸ்வரன் என்ற மாணவன் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு வராமல் இருந்தது அறிந்து மாணவனுக்கு உதவிகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்வதாக கூறி நேற்று பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அதேபோல் ஜீவா என்ற மாணவனையும் உடல் நலக்குறைவால் தொடர்ந்து வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அம்மாணவன் பள்ளிக்கு தொடர்ந்து வருவேன் என்று உறுதி அளித்தார்.
நேற்று முதல் தொடர்ந்து படிப்பதற்கு பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
கோலேந்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நிதீஷ் என்ற மாணவனை பத்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டது.
இக்களப் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஜீவானந்தம், காளியப்பன் தேர்தல் பணி துணை வட்டாட்சியர் அலுவலர் முருகேசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் மற்றும் அங்கையர்கண்ணி, கணக்காளர்கள் கலைச்செல்வன் ஆகியோர் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.