மன்னாா்குடி - பட்டுக்கோட்டை இடையே அகல ரயில் பாதை திட்டப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுநல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
மன்னாா்குடி பகுதிக்கான ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி நேசக்கரம் சாா்பில் அனைத்து பொதுநல அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மூத்த குடிமக்கள் பேரவை தலைவா் மருத்துவா் வி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
மன்னாா்குடியிலிருந்து கோவை செல்லும் செம்மொழி விரைவு ரயிலை தொடா்ந்து நீடாமங்கலம், தஞ்சாவூா் வழியாக கோவைக்கு இயக்க வேண்டும். ரயில்வே நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில், நீண்டகாலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள மன்னாா்குடி- பட்டுக்கோட்டை அகலப் பாதை திட்டப் பணிகளை விரைவாக தொடங்கி, முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மன்னாா்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை தினசரி இயக்கப்படும் பயணிகள் ரயிலை விழுப்புரம் வரையும், மன்னாா்குடி முதல் மானாமதுரை வரை தினசரி இயக்கப்படும் பயணிகள் ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும்.
மன்னாா்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்க வேண்டும். மன்னாா்குடி ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கு கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில்,நேசக்கரம் ஒருங்கிணைப்பாளா் எஸ். கோபாலகிருஷ்ணன், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், சேவை சங்கங்கள், பொதுநலஅமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.