செந்தலைப்பட்டிணத்தில் ஊராட்சி நிர்வாகம்-ஊர் ஜமாஅத் அறிவிப்பை தொடர்ந்து மாடுகள் இல்லாமல் காணப்பட்ட ECR



தஞ்சை மாவட்டத்தில் இசிஆர் சாலையில் உள்ள பல ஊர்களில் இரவு நேரங்களில் சாலைகளில் மாடுகள் அலைந்து திரிவதால் சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. சாலைகளில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த ஊர் நிர்வாகங்கள் பலவித முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக செந்தலையில் சில தினங்களுக்கு முன்பு செந்தலைபட்டினம் ஊர் ஜமாஅத் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்றை அறிவித்தது. அதில் மாலை 6.மணிக்கு மேல் தெருகளிலூம் E.C.R.சாலையிலும். பொது இடங்களில் சுற்றி திரியும் மாடுகளை மாட்டின் உரிமையாளர்கள் தாங்களின் வீடுகளில் கட்டி வளர்க்க வேண்டும். இரவு நேரங்களில் கட்டி வளர்க்காத மாடுகளை பிடித்து அரசு கால்நடை பராமரிப்பு வளாகத்தில் ஒப்படைக்கப்படும் என அறிவித்திருந்தது.

அறிவிப்பின் காரணமாக நேற்று இரவு நேரங்களில் ஈசிஆர் சாலை மற்றும் கடைதெருவில் மாடுகள் எதுவும் இல்லாமல் காணப்பட்டது, இரவு நேரங்களில் இதே நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகவும் இருக்கின்றது.

நன்றி: செந்தலை நியூஸ்





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments