புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர், தனது பழைய கடையில் உள்ள மின் இணைப்பை புதிய கடைக்கு மாற்றி கொடுக்க மணமேல்குடியில் உள்ள மின்சார வாரியத்தை கடந்த 2009-ம் ஆண்டு அணுகினார்.
அப்போது அங்கு வணிக ஆய்வாளராக இருந்த சண்முகம் மின் இணைப்பை மாற்றி கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் கல்யாணசுந்தரம் புகார் அளித்தார். ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை சண்முகம் வாங்கும் போது கையும், களவுமாக சிக்கிய அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
5 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கு புதுக்கோட்டையில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் லஞ்சம் கேட்டது மற்றும் லஞ்சம் வாங்கியது தொடர்பாக 2 பிரிவுகளில் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சண்முகத்தை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.