திருச்சி - மீமிசல் மாநில நெடுஞ்சாலையில் ஆவுடையார் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் - லாரி மோதல்; வாலிபர் பலி




ஆவுடையார்கோவில் அருகே கிடங்கி வயல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் ராஜா கருப்பையா (வயது 23). உதயமாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கல் பிரவீன் (23). இவர்கள் இருவரும் ஆவுடையார்கோவிலில் இருந்து மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கிக்கு சென்று கொண்டிருந்தனர். பெருச்சாபத்தி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, பன்வயல் சமாது வீதியை சேர்ந்த அமீர் பாட்சா (50) என்பவர் தைல மரங்களை ஏற்றி வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜா கருப்பையா பரிதாபமாக இறந்தார். 




படுகாயமடைந்த மைக்கல் பிரவீனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜா கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments