பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமலைராயசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை




பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமலை ராயசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

புதுக்கோட்டை மாவட்டம், திருமலை ராயசமுத்திரம் ஊராட்சியில் உடையனேரி காலனி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி பொதுமக்கள் தங்களது காலனிக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி, வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும். 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி பொதுமக்கள் திருமலை ராயசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமையல் செய்து சாப்பிட்டனர்

தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சமையல் செய்து சாப்பிட்டு அங்கேயே தங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார், புதுக்கோட்டை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments