மாண்டஸ் புயல் எதிரொலி: தயார் நிலையில் கடலோர பாதுகாப்பு போலீசார்



 

   
    வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாண்டஸ் என்ற புயலாக மாறி உள்ளது. இதையடுத்து நேற்று மணமேல்குடி அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் நேற்று மழை பெய்தது. மேலும் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளனர். இந்நிலையில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 

மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையில் போலீசார் கடலோர பகுதியில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புயல் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துகொண்டு கடற்கரை பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments