புதுக்கோட்டை மாவட்டத்தில் அவ்வையாா் விருதுபெற தகுதியானவர்கள் எதிர்வரும் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
உலக மகளிர் தினமான மார்ச் 8 அன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்த தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட தகுதியான நபருக்கு மாநில அரசின் அவ்வையார் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றி வருகின்ற தனிநபரை அங்கீகரிக்கும் விதமாக மாநில அரசின் அவ்வையார் விருது வழங்கிட தகுதியான விண்ணப்பங்களை 26.12.2022 க்குள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விருதிற்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.gov.in பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தின் மூலம் 23.12.2022 வரை விண்ணபிக்கலாம்.
தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) ரொக்கப்பரிசு, 8 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்க பதக்கம், மற்றும் சால்வை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் உலக மகளிர் தின விழா அன்று வழங்கப்படும். மேலும் கையேட்டில் ((Booklet) இணைக்கப்பட வேண்டிய விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை (04322- 222270) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அவர்கள் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.