கீரனூர் பஸ் நிலையம் அருகே 6 கடைகள் தீவிபத்தில் எரிந்து நாசமானது. நாசவேலை காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடைகளில் தீவிபத்து
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பஸ் நிலையம் எதிரே தனியாருக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இங்கு கமாலுதீன் மளிகை கடையும், அனுமந்த் சீட் கவர் செய்யும் கடையும், அய்யப்பன், ரமேஷ் ஆகியோர் காய்கறி கடைகளை நடத்தி வந்தனர். இந்த 4 கடைகளிலும் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கீரனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
நாசவேலை காரணமா?
இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதனைக்கண்ட வியாபாரிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவத்துக்கு முன்னதாக நள்ளிரவு 12 மணியளவில் பஸ் நிலையம் வடபுறம் பகுதியில் உள்ள 2 கடைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அந்த கடைகளுக்குள் எந்த பொருட்களும் இல்லை. இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும், நள்ளிரவில் அடுத்தடுத்து 6 கடைகள் தீப்பிடித்து எரிந்ததால் நாச வேலை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.