வருகிற 10-ந் தேதி வரை பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைந்துள்ள ரெயில் பாலத்தின் மையத்தில் உள்ள தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 8 நாட்களாக பாம்பன் பாலத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
அதனால் ராமேசுவரம் வரும் அனைத்து ரெயில்களும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை ஐ.ஐ.டி குழுவினர் மற்றும் தெற்கு ரெயில்வே பொறியாளர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
10-ந் தேதி வரை
பாம்பன் ரெயில் பாலத்தில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர்கள், காலி ரெயில் பெட்டிகளை பாம்பன் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவுகள் லக்னோ ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளது.
மேலும் பராமரிப்பு பணிகளை தொடரும் வகையில் ஜனவரி 10-ந் தேதி வரை பாம்பன் ரெயில் பாலத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வெளியூர் ரெயில்கள்
இதனால் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து ரெயில்களும் மண்டபம் ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டு மீண்டும் அங்கிருந்தே வழக்கமான நேரத்தில் புறப்பட்டு செல்லும். அதுபோல் மதுரை, திருச்சி ஊர்களில் இருந்து ராமேசுவரத்திற்கு வரும் ரெயில்கள், ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்லும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.