மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
அதேவேளையில், மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்த்து, இந்த ஒரு மாத காலத்துக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்துவிட வேண்டாம் என்றும், ஜனவரி 31ஆம் தேதிக்குப் பிறகு அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார்.
இன்றுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், சுமார் 1.61 கோடி போ் மட்டுமே ஆதாா் எண்ணை இணைத்திருக்கும் நிலையில் கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை அதாவது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனீட்டாளா்கள் உள்ளனா். அவா்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரையும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனை இரண்டு வழிகளில் இணைக்கலாம் என்றும், தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளம் வழியாகவோ அல்லது மாநிலத்தில் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் வழியாகவோ இணைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை சுமாா் 1.61 கோடி மின் இணைப்புகள் மட்டுமே, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. நாளை புத்தாண்டு தினம் என்பதால், சிறப்பு முகாம் நடைபெறாது என்றும், மொத்தமாக இதுவரை 1.61 கோடி மின் இணைப்புகளுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை டிச. 31-க்குள் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் பயனீட்டாளா்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டியுள்ளது.
எனவே, இதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாத காலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.