புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி - புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தினை மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 36 மையங்களில் தொடங்கப்பட்டது.
மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்களின் தலைமையில் தொடங்கியது.
இந்நிகழ்வில் மும்பாலை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி அரப்நிஷா ஜமால் முகமது , இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. இராமலிங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி மூகாம்பிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதிப்புக்குரிய திருமதி வாசுகி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது 2022 முதல் 2027 வரை செயல்படுத்தப்பட உள்ளது .
கற்றல் மையமானது பள்ளிகள் சமுதாயக்கூடம் 100 நாள் வேலை திட்ட பணித்தளம் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து மையங்கள் அமைத்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதில் கற்போர் வசதிக்கேற்ப கற்றல் மையம் வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல் கற்போருக்கு எழுத்துக்களை அடையாளம் காணுதல், எண்களை அடையாளம் காணுதல்,
எழுத படிக்க வாசிக்க , பெயர் எழுதுதல், குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் எழுதுதல், ஊர் பெயர் எழுதுதல் மற்றும் கையெழுத்து போட கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியை திருமதி சித்ரா அவர்கள்
இந்நிகழ்வில் நன்றியுரை கூறினார்.
ஆசிரியர் பயிற்றுநர் அங்கையற்கண்ணி மற்றும் ஆசிரியர்கள் சித்ரா ஜெசிந்தா மலர்விழி வெனிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.