மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கும் நிலையில், ஆதார் நகலை பதிவேற்றம் செய்ய தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
ஆன்லைனில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது, ஆதார் நகல் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் செயல்முறையில், ஆதார் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இலவச மின்சாரம் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இது சரியான பயனாளிகளுக்கு செல்கிறதா? என்பதை அடையாளம் காண தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து ஒருகிறது. அதன் ஒருபகுதியாக ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்குமாறு மின்சாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, அந்தந்தப் பகுதிகளில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் அரசு சார்பில் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம் http://www.tangedco.gov.in என்ற பக்கத்தில் இ.பி – ஆதார் இணைக்கப்படுகிறது. மின் கட்டணம், புதிய மின் இணைப்பு, மின் இணைப்புபெயர் போன்ற பல்வேறு சேவைகளுக்கு இதே இணைப்பை பயன்படுத்துவதால் சர்வர் கோளாறு ஏற்படுகிறது. பயனர்கள் சிரமப்படுவதாக புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பயனர்கள் வசதிக்காக ஆதார் எண்ணை இணைக்க மட்டும், https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரியை, மின் வாரியம் நேற்று வெளியிட்டது. இ.பி – ஆதார் இணைப்பவர்கள் இந்த இணைய தளத்தை பயன்படுத்தி ஈஸியாக இணைக்கலாம்.
ஆன்லைனிலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம். அதற்கு மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைப்பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவிட வேண்டும். அடுத்து தொலைப் பேசி எண் பதிவிட்டப் பின் OTP வரும், அதை பதிவிட வேண்டும். பின்னர், திரையில் வரும் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடைசியாக உங்கள் ஆதார் எண், ஆதாரில் உள்ளபடி பெயர் குறிப்பிட வேண்டும். இதன் பின் உங்கள் தொலைப்பேசி எண்ணுக்கு மீண்டும் ஒரு OTP அனுப்பப்படும். அதை மட்டும் குறிப்பிட்டு சப்மிட் கொடுத்தால் போதும். இந்த நடைமுறையில் முன்பு ஆதார் எண்ணுடன் அதன் நகலையும் பதிவேற்ற வேண்டும். ஆனால் பயனர்கள் புகார், சிரமங்கள் இருப்பதாக தெரிவித்தப் பின் மின்வாரியம் இந்த நடைமுறையை எளிதாக்கியுள்ளது.
இதனிடையே நுகர்வோர்களுக்கு இந்த இணைப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கான பதில்களை இங்கு பார்க்கலாம்.
1. மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது?
ஆதாரை இணைக்க
என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களின் மின் இணைப்பு பதிவை உள்ளிட்டு ஆதார் எண்ணை இணைக்கலாம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு நீங்களே நேரில் சென்று ஆதார் எண்ணை இணைக்கலாம்.
2. இணையம் மூலம் எவ்வாறு ஆதார் எண்ணை இணைப்பது?
Step 1 : ஆதாரை இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவும்.
Step 2 : உங்கள் மின் இணைப்பில் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அந்த OTPயை பதிவிட்ட பிறகு, உங்களின் ஆதார் கார்டையும், ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.
Step 3 : நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதில் உங்களுக்கான விருப்பத்தை தேர்வு செய்து சப்மிட் செய்தால் போதும். உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைத்துவிடலாம். இதையடுத்து ஒப்புகை ரசீது வரும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
3. மின் இணைப்போடு பதிவு செய்த மொபைல் எண் என்னிடம் இல்லை என்றால் எப்படி இணைப்பது?
உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP வருவதற்கு முன்னர், உங்கள் மொபைல் எண்ணை நீங்கள் பதிவு செய்ய வேண்டும். அப்போது, உங்களின் பழைய எண் இல்லை என்றாலும், இப்போது உங்களிடம் இருக்கும் எண்ணை பதிவிட்டால், நீங்கள் ஆதாரை இணைக்கலாம்.
4. நான் வாடகை வீட்டில் உள்ளேன். என் ஆதாரை நான் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்போடு இணைக்க வேண்டுமா?
வீட்டின் உரிமையாளர் அனுமதி தந்தால் வாடகை வீட்டில் உள்ளவரே பதிவு செய்துகொள்ள முடியும்.
5. யாரெல்லாம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?
வீடு, விசைத்தறி, விவசாயம் மற்றும் குடிசை வீட்டு மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
6. வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தால், மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா?
இல்லை. ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பின் பெயரில் மாற்றம் செய்ய முடியும்.
7. வாடகைதாரர் மாறும்பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?
வாடகைதாரர் மாறும்போது, புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதாரை இணைக்கலாம்.
8. நான் 5 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனி மீட்டர்கள் உள்ளன. நான் எப்படி ஆதாரை இணைப்பது?
உங்கள் ஆதார் எண்ணையே அனைத்து இணைப்புகளுக்கும் வழங்க முடியும். அதனால், எந்தப் பாதிப்பும் இல்லை.
9. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்னவாகும்?
ஆதாரை இணைக்க காலக்கெடு இல்லை; ஆனால் மானியம் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
10. ஆதார் எண்ணை இணைத்தால்தான் நான் மின் கட்டணத்தை செலுத்த முடியுமா?
ஒரே நேரத்தில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க அதிக நுகர்வோர் முயற்சித்ததால், சர்வர் முடங்கியது. இதையடுத்து, 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மின் வாரியம் உத்தரவிட்டது. மேலும், ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.
11. என் தாத்தா/அப்பா பெயரில் மின் இணைப்பு உள்ளது. ஆனால், அவர் இறந்துவிட்டார். நான் எப்படி ஆதாரை இணைப்பது?
மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யாவிட்டாலும், யார் பெயரில் மாற்றம் செய்ய உள்ளீர்களோ அவரது பெயரில் உள்ள ஆதார் எண்ணை இணைக்கலாம். உங்களுடைய பெயரில் நீங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமானால், உங்களுடைய ஆதார் கார்டை பதிவேற்றம் செய்தால் போதும்.
12. ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா?
கட்டாயம் ரத்து செய்யப்படபடாது. அப்படி யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
13. ஆதாரை எவ்வளவு நாளில் இணைக்க வேண்டும்?
ஆதாரை இணைக்க காலக்கெடு எதுவும் இல்லை. ஆனால், கட்டாயம் இணைக்க வேண்டும்.
14. எங்களிடம் இணையதள வசதி இல்லை. நான் எப்படி இணைப்பது?
டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.