புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கோட்டைப்பட்டணம் மீனவர் காலனியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி மற்றும் பரிசு வழங்குதல் பள்ளித் தலைமையாசிரியர் பொறுப்பு செய்தல் பாரூக் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
இவ்விழாவில் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் படிக்கின்ற மாணவர்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கலந்துகொண்டு பலூன் உடைத்தல், முறுக்கு கடித்தல், பிஸ்கட் கடித்தல், உயரம் தாண்டுதல், வட்டத்திற்குள் குதித்தல் மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடினர்.
போட்டிகளின் முடிவில் மாணவர்களுக்கு தேநீர் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் இயன் முறை மருத்துவர் பள்ளி ஆயத்த பயிற்சி மைய ஆசிரியர், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.