பாம்பன் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு... இராமேஸ்வரம் - செகந்திராபாத் (ஹைதராபாத்) வாராந்திர சிறப்பு ரயில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கால தாமதமாக வருகிறது..



 

திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செகந்திராபாத்- ராமேசுவரத்துக்கு வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது 

செகந்திராபாத் - இராமேஸ்வரம்

செகந்திராபாத் -ராமேஸ்வரம்   (வண்டி எண் 07695)வாராந்திர  சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை தோறும் இரவு 9.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு விழுப்புரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை திருவாரூர் (15.15),  திருத்துறைப்பூண்டி(15.58), அதிராம்பட்டினம் (16.34), பட்டுக்கோட்டை (16.50), .அறந்தாங்கி (17.50), காரைக்குடி (19.10) சிவகங்கை மானாமதுரை இராமநாதபுரம் வழியாக சென்று வியாழக்கிழமை இரவு 11.40 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடையும்.

இராமேஸ்வரம் - செகந்திராபாத் 

இதைப்போல மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - செகந்திராபாத் (வண்டி எண் 07696) வாரந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 8.50 மணிக்கு  ராமேசுவரத்தில் புறப்பட்டு இராமநாதபுரம் மானாமதுரை சிவகங்கை காரைக்குடி (12.05), அறந்தாங்கி (12.29), பட்டுக்கோட்டை (13.13), அதிராம்பட்டினம்(13.29), திருத்துறைப்பூண்டி   (14.03), திருவாரூர் (15.15),‌ மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை  இரவு 9.50‌ மணிக்கு அடையும் பின்னர் மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது

பாம்பன் பாலம் 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

1914-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த பாலம் நூற்றாண்டை கடந்து சேவை செய்து வருகிறது. தென்னக ரெயில்வேயின் முக்கிய அடையாளமாக உள்ள பாம்பன் ரெயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கர்டர்கள் கடல் காற்று காரணமாக அடிக்கடி துருப்பிடிக்கும்.

இதனை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக பிரத்யேக கலவைகளும் பாலத்தில் பூசப்பட்டு வருகிறது. புயல் மற்றும் கடல்காற்று அதிகமாக வீசப்படும் காலங்களில் பாம்பன் ரெயில் பாலத்தில் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

கடல் காற்று, அலையின் தன்மைகளை கண்டறிய தண்டவாளத்தில் நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கருவி கடல் காற்றின் வேகம், சீற்றம் குறித்து பதிவு செய்யும். அதனை பொருத்து பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

கடந்த ஒரு வாரமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மிக குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த நவீன கருவி திடீரென பழுதானதால் நேற்று மாலை முதல் ரெயில்களை இயக்க சிக்னல்கள் கிடைக்கவில்லை. இதனால் கடலில் காற்று வீசும் தன்மை, அலையின் தன்மை குறித்த விவரங்கள் தெரியவில்லை.

இந்த நிலையில் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த நவீன கருவி திடீரென பழுதானதால் நேற்று மாலை முதல் ரெயில்களை இயக்க சிக்னல்கள் கிடைக்கவில்லை. இதனால் கடலில் காற்று வீசும் தன்மை, அலையின் தன்மை குறித்த விவரங்கள் தெரியவில்லை.

பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று காலை பாம்பன் வந்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில்கள் கடக்கும்போது பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய முடியாதபட்சத்தில் சென்னை, பெங்களூருவில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்படுவார்கள் என தெரிகிறது

கால தாமதம் 

ராமேசுவரத்தில் இருந்து  காலை செகந்திராபாத்துக்கு இயக்கப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டது. அந்த ரெயிலில் செல்வதற்காக முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் ராமேசுவரம் ெரயில் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் மண்டபம் அழைத்து வரப்பட்டனர்.

முன்னதாக ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட பெட்டிகளுடன் நிறுத்தி இருந்த அந்த ரெயிலானது  காலை 10 மணி அளவில் காலி பெட்டியாக ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு, பாம்பன் ரெயில் பாலம் மற்றும் தூக்குப்பாலம் வழியாக மெதுவாக கடந்தபடி மண்டபம் வந்தது. தொடர்ந்து நேற்று காலை 10.30 மணி அளவில் மண்டபத்திலிருந்து செகந்திராபாத்துக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் NTES APP Where is my train app ரயில் எங்கே வந்து கொண்டு உள்ளது சரி செய்து கொள்ளுங்கள்..




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments