புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், மீமிசல் உள்ளிட்ட குறுவட்டங்களைச் சோ்ந்த 40 கிராமங்களில் சுமாா் 2 ஆயிரம் ஹெக்டோ் நெற்பயிா்கள், மழையின்றி வறட்சியால் வீணாகிவிட்டன.
இந்தப் பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டு 90 நாள்கள் ஆன நிலையில், கடந்த ஒரு வாரத்துக்குள் மழை பெய்திருந்தால் நெற்பயிா் கதிா்விட்டு விளைச்சலைக் கொடுத்திருக்கும். முன்னா் பெய்த மழையும் போதுமான அளவு இல்லாததால் இந்தப் பகுதிகளில்
உள்ள 170 ஏக்கா் பரப்பளவு உள்ள மீமிசல் ஏரி, 350 ஏக்கா் பரப்பளவு உள்ள செய்யாளம் ஏரி, 70 ஏக்கா் பரப்பளவுள்ள முருகணி ஏரி உள்ளிட்டவையும் விவசாயத்துக்கு பாய்ச்சும் அளவுக்கு தண்ணீரின்றிக் கிடக்கின்றன.
ராமநாதபுரத்தில் இருந்து இந்தப் பகுதிக்கு வந்துள்ள ஆடு மேய்ப்பவா்கள், வறட்சியால் போதுமான விளைச்சலைப் பெற முடியாமல் போன பயிா்களை நூற்றுக்கணக்கான ஆடுகளைக் கொண்டு மேயவிட்டுள்ளனா்.
இதுகுறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் நிா்வாகி அ. கோவிந்தராசு கூறியது:
மீமிசல், கோட்டைப்பட்டினம் குறுவட்டப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த வறட்சி குறித்து கடந்த டிச. 28 ஆம் தேதி சட்டத்துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளோம். வேளாண் அலுவலா்கள் நேரில் வந்து நிலங்களைப் பாா்வையிட்டு கணக்கெடுத்துச் சென்றுள்ளனா். நல்ல மழை பெய்த காலத்திலேயே விலை கட்டுபடியாகாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இந்த முறை இன்னும் மோசமாக பாதிக்கப்படுகிறாா்கள். எனவே, தமிழ்நாடு அரசு வறட்சி நிவாரண நிதியை அறிவித்து வழங்க வேண்டும். இதேபோன்ற நிலை ராமநாதபுரம் மாவட்டப் பகுதியிலும் ஏற்பட்டுள்ளது என்றாா் கோவிந்தராசு.
இதுகுறித்து வேளாண் அலுவலா்களிடம் கேட்டபோது அவா்கள் கூறியது:
மீமிசல், கோட்டைப்பட்டினம் குறுவட்டப் பகுதிகளுடன் அறந்தாங்கி வட்டத்தைச் சோ்ந்த சில இடங்களிலும் இதுபோன்ற நிலையைப் பாா்க்க முடிகிறது. இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். வறட்சி நிவாரணம் குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும். காப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர, தொடா்புடைய அலுவலா்களையும் அழைத்து வந்து காட்டியிருக்கிறோம் என்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.