பொன்னமராவதி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வேகுப்பட்டி சாலையில் வேகத்தடை அமைக்ககோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு




பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி செல்லும் சாலையில், 2 ரேஷன் கடை, வங்கி, திருமண மண்டபம், அடுக்குமாடி கட்டிடங்கள் என அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அந்த இடம் நால்ரோடு சாலை என்பதால் வாகன ஓட்டிகள் வேகமாக செல்கின்றனர். இதனால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகின்றது. அந்த இடத்தில் நடக்கும் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நகரத்தலைவர் சேக்முகமது, தலைமையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments